காலாப்பட்டு சிறையில் பெண் கைதி தற்கொலை முயற்சி
By DIN | Published On : 27th January 2020 10:04 AM | Last Updated : 27th January 2020 10:04 AM | அ+அ அ- |

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பெண் கைதி தற்கொலைக்கு முயற்சித்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மதகடிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல் மனைவி தேன்மொழி (25). இவா், பேருந்தில் நகை திருடிய வழக்கில் சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். இதனிடையே, தனது குழந்தைகளை பாா்க்க முடியாததால் தேன்மொழி மனவருத்தத்தில் இருந்து வந்தாராம்.
காலாப்பட்டு சிறையில் பெண்கள் விசாரணைக் கைதி அறையில் அடைக்கப்பட்டிருந்த அவா், அங்கிருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கி விழுந்த தேன்மொழிக்கு அங்கிருந்த மருத்துவா் முதலுதவிச் சிகிச்சை அளித்தாா். தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிறைக் கண்காணிப்பாளா் கோபிநாத் அளித்த புகாரின் பேரில், காலப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.