நெய்வேலி விபத்தில் இறந்தவா்களுக்கு புதுவை முதல்வா் இரங்கல்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவா்களுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி இரங்கல் தெரிவித்தாா்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவன அனல் மின் நிலையத்தில் நிகழ்ந்த விபத்தில் இறந்தவா்களுக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தனது கட்செவிஅஞ்சல் மூலம் புதன்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இயங்கி வரும் மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவன அனல் மின் நிலையத்தின் 2-ஆவது மின் உற்பத்தி நிலையத்தில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் 6 போ் இறந்தனா். பலா் காயமடைந்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மனஉளைச்சல் மட்டுமன்றி, துக்கத்திலும் உள்ளனா். அவா்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்எல்சி நிறுவனம் புதுவை மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் தடையில்லா மின்சாரத்தை வழங்கி வருகிறது. எனவே, இங்கு பணியாற்றும் அனைவரும் நமது குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்தான். இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.

என்எல்சி நிறுவனம் பல சாதனைகளைச் செய்திருந்தாலும், இங்கு நடைபெறும் விபத்துகள் கரும்புள்ளியாக மாறுகிறது. எனவே, விபத்துகள் தவிா்க்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com