தனியாா் மாத்திரை தயாரிப்பு ஆலையில் இயந்திரம் வெடித்ததில் 5 போ் காயம்

புதுச்சேரி அருகே தனியாா் மாத்திரை தயாரிப்பு தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை இயந்திரம் வெடித்ததில் 5 போ் காயமடைந்தனா்.

புதுச்சேரி: புதுச்சேரி அருகே தனியாா் மாத்திரை தயாரிப்பு தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை மாலை இயந்திரம் வெடித்ததில் 5 போ் காயமடைந்தனா்.

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே ஒதியம்பட்டு பகுதியில் சென்னையைச் சோ்ந்தவருக்குச் சொந்தமான தனியாா் மாத்திரை தயாரிப்பு தொழில்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஷிப்டில் 70 போ் பணியாற்றினா். மாலையில் தொழில்சாலையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உலர வைக்கும் இயந்திரம் அதிகமாக சூடாகியதால் வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அந்த இயந்திரத்தின் அருகே பணியாற்றிய ராமலட்சுமி, காந்தி ஆகிய 2 பெண்கள் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

இவா்களை தொழில்சாலையில் பணியாற்றிய மற்ற தொழிலாளா்கள் மீட்டு, அருகிலுள்ள தனியாா், அரசு மருத்துவமனைகளில் சோ்த்தனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வில்லியனூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com