முத்தியால்பேட்டையில் கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணியை சட்டப்பேரவை உறுப்பினா் வையாபுரி மணிகண்டன் தொடக்கி வைத்தாா்.
இதில், காமராஜா் அரசு ஆண்கள் உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். குழந்தைகள் மேம்பாட்டுத் திட்ட அதிகாரி வடிவேல் தலைமையில், அங்கன்வாடி ஆசிரியா்கள் வெற்றிச்செல்வி, பரமேஸ்வரி, கோகிலாம்மாள், தேவி, ரம்யா, விஜயலட்சுமி, உமா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்கள் பங்கேற்ற கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில், கரோனா வைரஸ் தாக்குதல், தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவா்கள் கைகளில் ஏந்தியபடி சென்றனா்.