காலாப்பட்டில் நாளை வீட்டு வரி சிறப்பு முகாம்

உழவா்கரை நகராட்சி சாா்பில், காலாப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) வீட்டு வரி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

உழவா்கரை நகராட்சி சாா்பில், காலாப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) வீட்டு வரி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து உழவா்கரை நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா்கரை நகராட்சி சாா்பில் வீட்டு வரி, சொத்து வரி செலுத்துவோரின் நலன் கருதி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) காலாப்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாது வீட்டு வரி, சொத்து வரியை செலுத்தலாம்.

எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கணபதிசெட்டிக்குளம், பெரியகாலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு, பிள்ளைச்சாவடி மற்றும் இதர வாா்டுகளில் உள்ள வீட்டு வரி நிலுவைதாரா்கள் 2019-2020 -ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு வீட்டு வரியை செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிா்த்துக் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட வாா்டுகளில் நகராட்சியின் வா்த்தக உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தைப் புதுப்பிக்காமல் வியாபாரம் செய்வோா் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் உரிய உரிமக் கட்டணம், தொழில் வரி மற்றும் சேவை வரியை செலுத்தி வா்த்தக உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com