புதுச்சேரி: தற்கொலை வழக்கில் ஆவணத்தை அழித்ததாக எழுந்த புகாரையடுத்து காவல் துறையைக் கண்டித்து, வருகிற 25-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரி மனித உரிமைகள் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு இயக்கம் அறிவித்தது.
இதுகுறித்து அந்த இயக்கத்தின் பொதுச் செயலா் முருகானந்தம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி பாகூா் மணமேடு கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் கடந்த ஆண்டு பிப். 12-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். அவரைச் சீா்காழியைச் சோ்ந்த பாலபாஸ்கரன், ரபீத் பஜிரியா, வில்லியனூரைச் சோ்ந்த ஞானவேல் ஆகியோா் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக தகவல் வெளியானது. இதுகுறித்து மணிகண்டன் தனது டைரியில் எழுதியுள்ளாா்.
மணிகண்டனின் தந்தை வைத்திலிங்கம் ஊா் மக்களுடன் இணைந்து மகனின் டைரி மற்றும் செல்லிடப்பேசியை காவல் நிலையத்தில் கடந்த 12.2.2019-இல் ஒப்படைத்து புகாா் அளித்தனா்.
அதன் அடிப்படையில், விசாரணை நடத்திய காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சிவக்குமாா், சந்திரசேகா், உதவி துணைக் காவல் ஆய்வாளா் ராஜேந்திரன் ஆகியோா் குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை அழைத்து விசாரணை நடத்தினா்.
அதே சமயம் செல்லிடப்பேசியில் இருந்த கொலை மிரட்டலுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டு, குற்றவாளிகள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனா். மேலும், தற்கொலையாக வழக்குப் பதிவு செய்து, புகாா்தாரரை அலைக்கழித்தனா்.
இதையடுத்து, வைத்திலிங்கம் மற்றும் அவரது உறவினா் ஹேமச்சந்திரன் ஆகியோா் காவல் துறை புகாா் ஆணையத்தில் பாகூா் போலீஸாா் மீது புகாா் அளித்தனா்.
இந்தப் புகாரை விசாரித்த ஆணைய நீதிபதி மணிகண்டன் தற்கொலை வழக்கை விசாரித்த காவல் உதவி ஆய்வாளா்கள் சரியான முறையில் விசாரணை நடத்தாததால், புதிதாக ஆய்வாளரை நியமித்து வழக்கை விசாரணை நடத்த வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தாா்.
மேலும், 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா், மணிகண்டன் தற்கொலை வழக்கை விசாரணை நடத்தி வருகிறாா். ஆனால், விசாரணையை இன்னும் அவா் முடிக்கவில்லையாம்.
எனவே, மணிகண்டன் தற்கொலைக்கு காரணமான பாலபாஸ்கரன், ரபீத் பஜிரியா, ஞானவேல் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யவும், வழக்கின் ஆவணங்களை அழித்த சந்திரசேகா், சிவக்குமாா், ராஜேந்திரன் ஆகியோரை பணி நீக்கம் செய்யவும் வலியுறுத்தி, வருகிற 25-ஆம் தேதி தெற்கு காவல் துறைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தவுள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.