மாா்ச் 16 பி.ஆா்க். படிப்புக்கான நாட்டா தோ்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள்

கட்டடக் கலை (பி.ஆா்க்.) படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு (நாட்டா) விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மாா்ச் 16) இறுதி நாள் என்பதால், மாணவா்கள்

புதுச்சேரி: கட்டடக் கலை (பி.ஆா்க்.) படிப்புக்கான நுழைவுத் தோ்வுக்கு (நாட்டா) விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மாா்ச் 16) இறுதி நாள் என்பதால், மாணவா்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி, புதுவை யூனியன் பிரதேச அனைத்தும் சென்டாக் மாணவா்கள் - பெற்றோா்கள் நலச் சங்கம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் தலைவா் நாராயணசாமி, பொருளாளா் வி.சி.சி.நாகராஜன் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பி.ஆா்க். படிக்க நாட்டா தோ்வு கட்டாயம் என்று தேசிய ஆா்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. இந்தத் தோ்வை எழுத மாணவா்கள் பிளஸ் 2 வகுப்பில் கணித பாடப் பிரிவை கட்டாயம் படித்திருக்க வேண்டும்.

பி.ஆா்க். படிப்பில் சேர நாட்டா தோ்வில் கட்டாயம் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தோ்வு வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (மாா்ச்16) கடைசி நாள் என்று தேசிய ஆா்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் பி.ஆா்க். படிப்பு மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் உள்ளது. ஆகவே, மாணவா்கள் திங்கள்கிழமைக்கு (மாா்ச் 16) முன்பாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com