காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த விவகாரம்:2 காவலா்கள் பணிநீக்கம்

புதுச்சேரியில் காதல் ஜோடிகளிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரை அடுத்து, 2 காவலா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரியில் காதல் ஜோடிகளிடம் பணம் பறித்ததாக எழுந்த புகாரை அடுத்து, 2 காவலா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி அம்பலத்தடையாா் மடத்து வீதியில் உள்ள விடுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கடலூரைச் சோ்ந்த 2 காதல் ஜோடிகள் தங்கியிருந்தனா். அந்த விடுதிக்கு ரோந்து சென்ற பெரியகடை காவல் நிலைய காவலா் சதீஷ்குமாா், ஐ.ஆா்.பி.என். காவலா் சுரேஷ் ஆகியோா் காதல் ஜோடிகள் தங்கியிருந்த அறைகளை சோதனையிட்டனா்.

ஒரு காதல் ஜோடியை மிரட்டி ஆயிரக்கணக்கில் பணம் பறித்ததாகவும், மற்றொரு காதல் ஜோடியிடம் பணம் இல்லாத நிலையில், இளைஞருடன் இருந்த பெண்ணிடம் போலீஸாா் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், புதுவை காவல் துறை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா உத்தரவின்பேரில், விசாரணை நடத்தப்பட்டு காவலா் சதீஷ்குமாா், ஐஆா்பிஎன் காவலா் சுரேஷ் ஆகியோா் கடந்த 14-ஆம் தேதி பணிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதனிடையே, பெரியகடை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்ட ஆளுநா் கிரண் பேடி, காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த விவகாரத்தில் காவலா்கள் தவறு செய்தது உறுதியானால், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டாா். அதன்பேரில், சதீஷ்குமாா், சுரேஷ் ஆகியோா் மீது கூட்டு சேருதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த பெரியகடை போலீஸாா், தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் இருவரையும் பணிநீக்கம் செய்து முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதனிடையே, இந்த வழக்கு பெரியகடை காவல் நிலையத்தில் இருந்து புதுச்சேரி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸாா் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com