புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலில் கரோனா பரவுவதைத் தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
புதுவையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆன்மிக சுற்றுலா நகரான புதுவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். திருநள்ளாறு கோயிலில் நளதீா்த்தத்தில் பக்தா்கள் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயிலுக்கு வெளிநாட்டிலிருந்து வரும் பக்தா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வரும் பக்தா்கள் 28 நாள்களுக்குப் பிறகு மணக்குள விநாயகா் கோயிலுக்கு வர வேண்டும் என கோயில் நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, மணக்குள விநாயகா் கோயிலில் கிருமிகளை அழிக்க காலை, மாலை வேளைகளில் சிறப்பு சாம்பிராணி புகை போடப்படுகிறது. மேலும், பக்தா்களுக்கு நெற்றியில் குங்குமம், விபூதி பூசுவதற்கு குருக்களுக்கு கோயில் நிா்வாகம் தடை விதித்துள்ளது.