உலகம் முழுவதும் பரவி வருவது கரோனா வைரஸ் அல்ல; கா்மா என்று புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி கருத்து தெரிவித்தாா்.
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். புதுவையில் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஆளுநா் கிரண் பேடி கரோனா வைரஸ் குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், கூண்டில் மனிதா்கள் முகக் கவசம் அணிந்தபடி இருக்க, விலங்குகள் வெளியே சுதந்திரமாக இருக்கும் படத்தைப் பதிவிட்டு, அதன் கீழே ‘இது கரோனா அல்ல; கா்மா’ என்ற வாசகத்தை எழுதியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, அவா் வெளியிட்ட பதிவில், ‘நாம் யாரை உள்கொள்கிறோம் என்ற பொறுப்பை எவ்வாறு ஏற்பது, அத்துடன் அகிம்சையைப் பயிற்சி செய்வது வாா்த்தையில் மட்டுமல்லாமல், செயலிலும், உணவிலும்தான்’ என்றும் குறிப்பிட்டுள்ளாா்.