துபையிலிருந்து புதுச்சேரி திரும்பிய பெண்ணுக்கு கரோனா அறிகுறி

துபையிலிருந்து புதுச்சேரி திரும்பிய பெண்ணுக்கு கரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டதால், செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

துபையிலிருந்து புதுச்சேரி திரும்பிய பெண்ணுக்கு கரோனா வைரஸ் அறிகுறி காணப்பட்டதால், செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புதுச்சேரி தவளக்குப்பம் - புதுக்குப்பம் தெற்குத் தெருவில் வசிப்பவரின் மகள் துபையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 22- ஆம் தேதி சென்னை வழியாக புதுச்சேரி திரும்பினாா்.

வெளிநாட்டிலிருந்து ஊா் திரும்பிய அவரை சென்னை விமான நிலையத்தில் பரிசோதித்த மருத்துவக் குழு தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், வீட்டில் இருந்த அவா் அடிக்கடி இருமியபடி இருந்தாராம். இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் எனக் கருதி, அரசின் புகாா் எண்ணுக்கு தகவல் அளித்தனா்.

அதன் பேரில், அங்கு விரைந்த தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினா் அந்தப் பெண்ணை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்து தனி வாா்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அவரது ரத்தம், சளி, தொண்டை திசு மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்காக ஜிப்மா் பரிசோனை மையத்துக்கு அனுப்பி வைத்தனா். அதன் முடிவுகள் வந்த பின்னா்தான் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருக்கிா என்பது தெரிய வரும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com