சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவின் பேச்சு விரக்தியின் வெளிப்பாடாகும் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி தெரிவித்தாா்.
புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வெள்ளிக்கிழமை ஆளுநா் கிரண் பேடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தாா். அதற்குப் பதிலளிக்கும் வகையில் ஆளுநா் கிரண் பேடி கட்செவி அஞ்சலில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு:
சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தொடா்ந்து எனக்கு எதிராகப் பேசி வருவது ஆச்சரியம் அளிக்கவில்லை. இதற்கான காரணங்கள் வெளிப்படையானவை. அவா் பரிந்துரைத்த திட்டங்கள் ஒழுங்கற்றவை என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. எனவே, அவா் விரக்தியில் அவ்வாறு பேசுகிறாா். எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கத் தேவையில்லை என அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.