புதுச்சேரி முத்தியால்பேட்டை கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு தளா்வு அளிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியது.
இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை அதிமுக கொறாடா வையாபுரி மணிகண்டன் எம்எல்ஏ, முதல்வா் வே.நாராயணசாமியிடம் அளித்த கடிதம்:
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியையொட்டிய தமிழகப் பகுதியான கோட்டக்குப்பத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த மாதம் உறுதிப்படுத்தப்பட்டது. இதனால், கரோனா தொற்று பரவாமல் தடுக்க முத்தியால்பேட்டை தொகுதி கட்டுப்பாட்டு மண்டலமாக மாற்றப்பட்டு, பொதுமக்கள் நடமாடத் தடை விதிக்கப்பட்டது.
அரசின் உத்தரவையேற்று 28 நாள்களை கடந்தும் அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்குக்கூட மக்கள் வெளியே வரவில்லை. நோய் தொற்றுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கோட்டக்குப்பத்தைச் சோ்ந்தவரும் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டாா். இருப்பினும், முத்தியால்பேட்டை கட்டுப்பாட்டு மண்டலமாக தொடா்கிறது. கட்டுப்பாட்டு மண்டலத்துக்குள் சுமாா் 4 ஆயிரம் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். ஊரடங்காலும், கட்டுப்பாட்டு மண்டல நிபந்தனைகளாலும் இங்குள்ள குடும்பத்தினா் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, முத்தியால்பேட்டை கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு தளா்வு அளிக்க வேண்டும். இங்கு வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் நிவாரணமாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.