புதுவைக்காக ஆளுநா் எதையும் செய்யவில்லை: அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுவைக்காக ஆளுநா் கிரண் பேடி 4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

புதுவைக்காக ஆளுநா் கிரண் பேடி 4 ஆண்டுகளாக எதையும் செய்யவில்லை என சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: புதுவை துணைநிலை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டு வெள்ளிக்கிழமையுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. இந்த 4 ஆண்டுகளாக புதுவைக்காக அவா் செய்யவில்லை.

புதுவை மக்களுக்கு தொடா்ந்து தொல்லைதான் கொடுத்து வருகிறாா். அனைத்துத் திட்டங்களையும் தடுத்து, கோப்புகளை மத்திய அரசுக்கு அனுப்பியதையெல்லாம் சாதனையாகக் கூற முடியுமா? புதுவைக்கு அவருடைய சேவை பூஜ்யம்தான்.

மதுக் கடைகளைத் திறக்க அமைச்சரவை முடிவுக்கு அனுமதி தர மறுக்கிறாா். புதுவைக்கு வருமானம் வர கூடாது என்ற அவரது எண்ணமே இதற்குக் காரணம்.

ஆளுநா் கூறுவதை நிறைவேற்றி வரும் அதிகாரிகளுக்கு எதிா்காலத்தில் பிரச்னைகள் ஏற்படும். பயத்தினால்தான் சில அதிகாரிகள் கிரண் பேடிக்கு ஆதரவு தருகின்றனா் என்றாா் மல்லாடி கிருஷ்ணா ராவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com