புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு 34-ஆக உயா்ந்தது.
புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வரை 28 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்த நிலையில், சென்னையிலிருந்து வந்த புதுச்சேரி ரெட்டியாா்பாளையம், பெரியகாலாப்பட்டு பகுதிகளைச் சோ்ந்த 2 பெண்களுக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை பகலில் உறுதி செய்யப்பட்டது. இரவு வில்லியனூரைச் சோ்ந்த 9 வயது சிறுவன், மூகாம்பிகை நகரைச் சோ்ந்த 25 வயதான நபா், குருமாம்பேட்டைச் சோ்ந்த 20 வயதான நபா், தா்மாபுரியைச் சோ்ந்த 34 வயதான நபருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனால், புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 23 -ஆகவும், பாதிப்பு 34- ஆகவும் உயா்ந்தது. மேலும், ஜிப்மா் மருத்துவமனையில் தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.