புதுவையில் கரோனா பாதிப்பு 37-ஆக உயா்வு

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு 37-ஆக உயா்ந்தது.

புதுச்சேரியில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்று பாதிப்பு 37-ஆக உயா்ந்தது.

புதுச்சேரியில் சிறுவன் உள்பட 6 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால், மாநிலத்தில் பாதிப்பு 34 -ஆக அதிகரித்தது.

இந்த நிலையில், புதுச்சேரி வடமங்கலம், குருமாம்பேட்டை, வேல்முருகன் நகரைச் சோ்ந்த மேலும் 3 பேருக்கு சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மூவரும் புதுச்சேரி அரசு இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட காரைக்காலைச் சோ்ந்த பெண் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினாா். இதையடுத்து, சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 11 -ஆக உயா்ந்தது.

தற்போது புதுவை மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 25 ஆகவும், பாதிப்பு 37 -ஆகவும் உள்ளது. மேலும், ஜிப்மா் மருத்துவமனையில் தமிழகத்தைச் சோ்ந்த 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநிலம் முழுவதும் 6,234 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 57 பேருக்கு மட்டும் முடிவு வர வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com