புதுவை திட்டக் குழும ஊழல் புகாா்: சிபிஐ விசாரணைக்கு அனுப்பக் கோரிக்கை

புதுவை திட்டக் குழுமம் மீதான ஊழல் புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அதிமுக இணைச் செயலா் மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.

புதுச்சேரி: புதுவை திட்டக் குழுமம் மீதான ஊழல் புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அதிமுக இணைச் செயலா் மு.ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன், தனியாா் ஜவுளி நிறுவனம் கட்ட அனுமதியளித்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும், புதுவை திட்டக் குழுமம் விதிமுறைகளை மீறி, அனுமதியளிக்க பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாகவும் புகாா் கூறினாா்.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலில் ஈடுபட்டவா்களின் சொத்துகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பேற்று திட்டக் குழுமத்தின் தற்போதைய தலைவா் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வா் எடுக்கத் தவறினால், துணைநிலை ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com