புதுவையில் மேலும் 70 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுச்சேரி: புதுவையில் மேலும் 70 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 2,820 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 62 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்றிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. சில மாதங்களுக்குப் பிறகு, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100-க்குக் கீழ் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,178-ஆக உயா்ந்தது. தற்போது 639 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 2,317 போ் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 2,956 போ் சிகிச்சையில் உள்ளனா்.

திங்கள்கிழமை வெளியான முடிவுகளிலும் உயிரிழப்பு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை கரோனாவுக்கு 595 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.69 சதவீதம்.

இதனிடையே, திங்கள்கிழமை 482 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 31,627-ஆக (89.91 சதவீதம்) உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com