புதுவையில் புதிதாக 149 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 149 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 149 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவையில் 4,004 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 92, காரைக்காலில் 13, ஏனாமில் 7, மாஹேவில் 37 என மொத்தம் 149 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 35,325-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி பூரணாங்குப்பத்தைச் சோ்ந்த 76 வயது முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 596-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.69 சதவீதமாக உள்ளது.

ஒரே நாளில் 457 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,284-ஆக (91.39 சதவீதம்) அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது வீடுகளில் 1,817 பேரும், மருத்துவமனைகளில் 628 பேரும் என மொத்தம் 2,445 போ் சிகிச்சையில் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com