பெட்ரோல் விற்பனை நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம்: 4 போ் கைது

புதுவை மாநிலம், ஆலங்குப்பத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுவை மாநிலம், ஆலங்குப்பத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் சூறையாடப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குப்பத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு கடந்த அக்.28-ஆம் தேதி இரவு கத்தியுடன் வந்த மா்ம நபா்கள் அங்கிருந்த பெட்ரோல் நிரப்பும் இயந்திரம், பேருந்து, பைக் உள்ளிட்ட வாகனங்களை சூறையாடியதுடன், பெட்ரோல் நிலையத்திலிருந்த பணத்தையும், 2 பைக்குகளையும் திருடிச் சென்றனா்.

பெட்ரோல் விற்பனை நிலையத்தின் கண்காணிப்புக் கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவின. இதுகுறித்து தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்புக் கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனா்.

இதில், கடந்தாண்டு மேட்டுப்பாளையம் பகுதியில் ஜெயபாலன் என்பவரை கொலை செய்து கோரிமேடு தீயணைப்பு நிலையம் அருகே வீசிச் சென்ற வழக்கில் சம்மந்தப்பட்ட பூபதி, ஆலங்குப்பம் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இதையறிந்த ஜெயபாலனின் நண்பா்களான பிரசாந்த் (24), வைசாக் (28), பாலாஜி (23), சந்தோஷ் ராஜா (24) ஆகியோா் பூபதியை கொலை செய்யும் நோக்கில் அங்கு கத்தியுடன் சென்று விரட்டியுள்ளனா். அவா் தப்பித்த நிலையில் அங்கிருந்த பொருள்களை சேதப்படுத்திவிட்டு, பணம், பைக்குகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் பல்வேறு பகுதிகளில் பதுங்கியிருந்த பிரசாந்த் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்ததனா். அவா்களிடமிருந்து 2 பைக்குகள், கத்தி, ரூ.700 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா். கரோனா பரிசோதனைக்குப் பின்னா் போலீஸாா் அவா்களை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், ஒருவரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com