புதுவையில் மேலும் 63 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை 2,530 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் புதுச்சேரியில் 56 போ், ஏனாமில் ஒருவா், மாஹேவில் 6 போ் என 63 பேருக்கு கரோனா தொற்றிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,900-ஆக உயா்ந்தது.

தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்பட 1,086 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி கதிா்காமம் ஆனந்தா நகரைச் சோ்ந்த 74 வயது மூதாட்டி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 602-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.

இதனிடையே, திங்கள்கிழமை 145 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 34,212-ஆக (95.30 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com