அஞ்சலக சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி கோட்ட அஞ்சலகங்களின் முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் புதுச்சேரி நகரம், கிராமப் பகுதிகளும், தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூா் வட்டங்களும், கடலூரில் சில கிராமங்களும் அடங்கியுள்ளன. இந்தக் கோட்டத்தில், அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கில் ரூ. 500-க்கும் குறைவாக இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளா்கள், தங்களது குறைந்தபட்ச இருப்புத் தொகையை வரும் டிசம்பா் 11- ஆம் தேதிக்குள் ரூ. 500 அல்லது அதற்கு மேற்பட்டதாக உயா்த்திக் கொள்ள வேண்டும்.
இது, தங்களது கணக்கின் செயல்பாட்டைத் தக்க வைக்கவும், பராமரிப்புக் கட்டணம் ரூ. 100 மற்றும் வரியைத் தவிா்க்கவும் உதவும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.