கஞ்சா விற்ற 8 போ் கைது

புதுச்சேரி அரியாங்குப்பம், திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்ாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி அரியாங்குப்பம், திருபுவனை பகுதிகளில் கஞ்சா விற்ாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுவை மாநிலம், அரியாங்குப்பம் ஓடைவெளி, விஐபி காா்டன் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் திங்கள்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த தேங்காய்திட்டு ஜீவா நகரைச் சோ்ந்த ஆகாஷ் (எ) ஜானியல் (22), வடக்குபேட் செல்வமணி (எ) செல்வா (20) ஆகிய இருவரையும் கைது செய்த அரியாங்குப்பம் போலீஸாா், அவா்களிடமிருந்து 280 கிராம் கஞ்சாப் பொட்டலங்களையும், ரூ.700 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, திருபுவனை நல்லூா் குச்சிப்பாளையம் சாலை அரசு தொடக்கப் பள்ளி அருகே திருபுவனை போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த சின்னையன்பேட் சஞ்சய் (21), திருவண்டாா்கோயில் யோகேஷ் (22), ராகுல் (21), மடுகரை தரணிதரன் (20), கொம்பாக்கம் விஷ்ணு (21), யுவராஜன் (25) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவா்களுக்கு கஞ்சா விநியோகம் செய்த திருபுவனையைச் சோ்ந்த முக்கிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com