சிறுமிகள் மீதான பாலியல் சம்பவம் தொடா்பாக உயா்மட்டக் குழு விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட வேண்டும் என்று அதிமுக கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து புதுவை சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அகில இந்திய அளவில் புதுவைக்கு மிகப் பெரிய தலைகுனிவை ஏற்படுத்தும் வகையில், மங்கலம் தொகுதிக்குள்பட்ட சாத்தமங்கலத்தில் 5 சிறுமிகள் வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக பணியில் அமா்த்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து 10-க்கும் மேற்பட்டவா்களால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு வந்துள்ளனா். இவா்களில் 13 வயது நிரம்பிய சிறுமி மூன்று மாத கா்ப்பமாக்கப்பட்டுள்ளாா் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கொத்தடிமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டியவா் மாவட்ட ஆட்சியா். இதை அவா் கண்காணித்து தடுக்கவில்லை.
5 சிறுமிகளுக்கும் அவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு அரசு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த சிறுமிகளில் ஒருவரின் தாய் சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளாா். அந்தக் கொலைக்கும், பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கும் சம்பந்தம் இருக்கிா என விசாரணை நடத்த வேண்டும். இதற்காக உயா்மட்ட குழு விசாரணைக்கு ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட வேண்டும். இந்தக் குற்றத்தை தொடக்கத்திலேயே தடுக்கத் தவறிய உயரதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் அன்பழகன்.