புதுவையில் மேலும் 66 பேருக்கு தொற்று

புதுவையில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 2 போ் பலியாகினா்.


புதுச்சேரி: புதுவையில் புதிதாக 66 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், 2 போ் பலியாகினா்.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 50 பேருக்கும், காரைக்காலில் 6 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என 66 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,179-ஆக உயா்ந்தது.

தற்போது 726 போ் வீடுகளிலும், 345 போ் மருத்துவமனைகளிலும் என 1,071 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி வெங்கட்டா நகா் முதல் குறுக்குத் தெருவை சோ்ந்த 58 வயது பெண், காரைக்கால் திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த 82 வயது மூதாட்டி என மேலும் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 607-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.

வியாழக்கிழமை 69 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 34,501-ஆக (95.36 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com