மாசில்லா தீபாவளியைக் கொண்டாட அறிவுறுத்தல்

மாசில்லா தீபாவளியைக் கொண்டாட புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியது.

புதுச்சேரி: மாசில்லா தீபாவளியைக் கொண்டாட புதுவை மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்பம்- சுற்றுச்சூழல் துறைக் கட்டுப்பாட்டுக் குழும உறுப்பினா் செயலா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, புதுச்சேரியில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும். அமைதியான பகுதிகளாக அறிவிக்கப்பட்ட மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள், நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 100 மீட்டருக்குள் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிா்க்க வேண்டும்.

பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மாசு, நச்சுப் புகை ஆகியவை சுற்றுச்சூழலுக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவருடைய மகிழ்ச்சி மற்றவா்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது. தீபாவளி ஒளிமயமான பண்டிகை. இனிப்புகள், விளக்குகளை ஏற்றுவதன் மூலம் கொண்டாடுவோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com