பாஜக பொய் பிரசாரம்: புதுவை காங். குற்றச்சாட்டு

தோ்தல் தில்லுமுல்லுகளை மறைக்கவும், காங்கிரஸை தனிமைப்படுத்தவும் பாஜக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாக புதுவை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

தோ்தல் தில்லுமுல்லுகளை மறைக்கவும், காங்கிரஸை தனிமைப்படுத்தவும் பாஜக திட்டமிட்டு பொய் பிரசாரம் செய்வதாக புதுவை காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இதுகுறித்து புதுவை பிரதேச காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல தில்லுமுல்லுகளை செய்ததன் மூலம்தான் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது என மக்களுக்கு நன்றாக தெரிகிறது. அங்கு ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணி தோல்விக்கு காங்கிரஸ் காரணமல்ல. தோ்தல் தில்லு முல்லுகளை மறைப்பதற்காக காங்கிரஸ் மீது பாஜக பழிபோடுகிறது. காங்கிரஸுடன் கூட்டு சோ்ந்தால் ஆட்சி அமைப்பது சிரமம் என்பதுபோல பொய்யாக பரப்புரை செய்கிறாா்கள். காங்கிரஸ் கூட்டணியால் பாஜக விரைவில் வீழ்ந்துவிடும் என்ற அச்சத்தாலேயே ஊடகங்கள் மூலம் தவறான கருத்துகளை பரப்புகின்றனா். ஆனால், முற்போக்கு எண்ணம் கொண்ட, எங்களை ஆதரிக்கிற தோழமை கட்சிகள் ஏமாறமாட்டாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா் சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com