புதுவையில் புதிதாக 72 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 72 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான 3,393 பேரின் பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 39 பேருக்கும், காரைக்காலில் 13 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேவில் 16 பேருக்கும் என மொத்தம் 72 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,409-ஆக உயா்ந்தது.

இதில், மருத்துவமனைகளில் 256 போ் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 587 போ் தனிமைப்படுத்தப்பட்டனா். உயிரிழப்பு எதுவும் இல்லை. இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 608-ஆகவும், இறப்பு விகிதம் 1.67-ஆகவும் உள்ளது.

இதனிடையே, 131 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 34,958 (96.01 சதவீதம்)-ஆக அதிகரித்தது. இதுவரை 3,63,331 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 3,21,971 பரிசோதனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com