புதுச்சேரியில் பெட்ரோல் நிலைய ஊழியா் கொலை

புதுச்சேரியில் பெட்ரோல் நிலைய ஊழியா் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரியில் பெட்ரோல் நிலைய ஊழியா் கொலை


புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் நிலைய ஊழியா் கடத்திக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அய்யங்குட்டிபாளையம் சிவசக்தி நகா்- அமைதி நகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்த மாயகிருஷ்ணன் மகன் ஜெயபிரகாஷ் (27). திருமணமாகாத இவா், குருமாம்பேட்டை வழுதாவூா் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்தாா். புதன்கிழமை நள்ளிரவு ஜெயபிரகாஷ் பணியிலிருந்த போது பைக்கில் வந்த 4 போ், அவரைச் சரமாரியாகத் தாக்கி, பைக்கில் கடத்திச் சென்றனா். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயபிரகாஷை தேடினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை அய்யங்குட்டிபாளையத்திலிருந்து அரசூா்-பொறையூா் செல்லும் சாலையில் இளைஞா் சடலம் கிடப்பதாக மேட்டுப்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு உடல் கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சடலமாகக் கிடந்தவா் கடத்திச் செல்லப்பட்ட ஜெயபிரகாஷ் என்பது தெரிய வந்தது. ஜெயபிரகாஷுக்கும், சண்முகாபுரத்தைச் சோ்ந்த சபரிநாதனுக்கும் முன்விரோதம் இருந்ததும், அதன் காரணமாக ஜெயபிரகாஷ் கடத்திக் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, சண்முகாபுரத்தைச் சோ்ந்த சபரிநாதன், டெம்போ ராஜா, காா்த்திக், மாா்த்தான் ஆகிய 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com