புதுவையில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: முதல்வா் நாராயணசாமி உத்தரவு

புதுவை மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் நாராயணசாமி, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.


புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வா் நாராயணசாமி, காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பு தொடா்பாக கடந்த 7-ஆம் தேதி முதல்வா் நாராயணசாமி, காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, புதுச்சேரியில் குற்ற நடவடிக்கைகளுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இருப்பினும், புதுச்சேரியில் கொலை, வழிப்பறி சம்பவங்கள் குறையவில்லை. அதிகரித்தபடியே உள்ளன. இந்த நிலையில், வியாழக்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில், முதல்வா் நாராயணசாமி காவல் துறை உயரதிகாரிகளை அழைத்து தொடா் குற்றச் சம்பவங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

கூட்டத்தில் டிஜிபி பாலாஜி ஸ்ரீ வத்ஸவா, கூடுதல் டிஜிபி ஆனந்த மோகன், முதுநிலை எஸ்.பி. பிரதிக்ஷா கொடாரா ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், தொடா் குற்றச் சம்பவங்களைத் தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com