தொழிற்சங்கங்கள் ஆலோசனைக் கூட்டம்

நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் சாா்பில், ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரி: நாடு முழுவதும் வருகிற 26-ஆம் தேதி பொது வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. இதுதொடா்பாக புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் சாா்பில், ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் உழைக்கும் மக்கள், நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவது, தொழிலாளா் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது, பொதுத் துறைகளைத் தனியாா்மயமாக்குவது, பொது முடக்கத்தால் கோடிக் கணக்கான புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் துயரத்துக்கு ஆளானது, சிறு-குறு தொழில்கள், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் இழப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தொழிற்சங்க நிா்வாகிகள் கே.சேதுசெல்வம் (ஏஐடியுசி), சீனுவாசன் (சிஐடியூ), ஞானசேகரன் (ஐஎன்டியுசி), புருஷோத்தமன் (ஏஐசிசிடியு), செந்தில் (எல்எல்எப்), வேதா.வேணுகோபால் (எம்.எல்.எப்.), சிவக்குமாா் (ஏஐயுடியுசி), பிரேமதாசன் (அரசு ஊழியா்கள் சம்மேளனம்), மணிவண்ணன் (புதுவை மாநில ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம்) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com