புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இளம் பருவ விழிப்புணா்வுக் கருத்தரங்கம் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது.
கருத்தரங்கை புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி மகப்பேறு மருத்துவா் லாவண்யா ராமடிகள் தொடக்கி வைத்தாா். இதில், இளம் பருவ உடல்சாா் பிரச்னைகள், எதிா்கொள்ளும் விதம், தீா்வுகள் குறித்து விளக்கப்பட்டன.
பள்ளி மாணவிகள் மருத்துவரிடம் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனா். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனா்.