புதுவையில் மேலும் 54 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 43 பேருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாஹேயில் 9 பேருக்கும் என 54 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,585-ஆக உயா்ந்தது.

தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 248 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 373 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 621 போ் சிகிச்சையில் உள்ளனா். வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளில் உயிரிழப்பு எதும் பதிவாகவில்லை. புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 609 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.66 சதவீதம்.

இதனிடையே, வெள்ளிக்கிழமை 101 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 35,355-ஆக (96.64 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com