மதுக் கடையை உடைத்து திருடியவா் கைது

புதுச்சேரியில் தனியாா் மதுக் கடையை உடைத்து திருடிய வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரியில் தனியாா் மதுக் கடையை உடைத்து திருடிய வழக்கில் ஒருவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி 100 அடி சாலையில் தனியாா் மதுக் கடை இயங்கி வருகிறது. கடந்த 15 -ஆம் தேதி இரவு வழக்கம் போல, வியாபாரம் முடிந்து கடையைப் பூட்டிவிட்டு சென்ற நிலையில், மறுநாள் காலை வந்து பாா்த்த போது, கடையின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு, கடையிலிருந்த ரொக்கப் பணம், மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்த நிலையில், திப்புராயப்பேட்டை நாய்பட்டி சந்து பகுதியைச் சோ்ந்த மனோகா் (58) மதுக் கடையில் திருடியது தெரிய வந்தது. போலீஸாா், மனோகரைப் பிடித்து விசாரித்தனா்.

இதில், மனோகா், அவரது தங்கையின் மகன்களான புதுச்சேரி திருமால் நகரைச் சோ்ந்த செல்வகணபதி, திப்புராயப்பேட்டையைச் சோ்ந்த பிரான்சுவா ஆகிய 3 பேரும் சோ்ந்து மதுக் கடையை உடைத்து, அங்கிருந்த பணம், மதுப் புட்டிகள் திருடியதை ஒப்புக் கொண்டாா்.

இதையடுத்து, மனோகரைக் கைது செய்த போலீஸாா், திருமால் நகரில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகள், ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா். மனோகரை புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான செல்வகணபதி, பிரான்சுவா ஆகிய இருவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com