புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அனுமதியளிக்கக் கோரி, மத்திய அரசுக்கு புதுவை பாஜக கடிதம் எழுதியது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ வா்தன் ஆகியோருக்கு புதுவை பாஜக மாநில தலைவா் வி.சாமிநாதன் சனிக்கிழமை அனுப்பிய கடிதம்: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல, புதுவையிலும் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, புதுவை முதல்வா் நாராயணசாமி தில்லிக்குச் சென்று இந்தக் கோப்புக்கு அனுமதி வழங்குமாறு மத்திய அமைச்சா்களைச் சந்தித்துத் திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.