புதுச்சேரி முதலியாா்பேட்டையில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை-கடலூா் சாலைகளைச் சீரமைக்கக் கோரி, பொதுப் பணித் துறையிடம் அந்தப் பகுதி மக்கள் சாா்பில் முறையிடப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை முதலியாா்பேட்டை கடலூா் சாலை-உப்பளம் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா்.
கட்சியின் தொகுதிச் செயலா் ஏகாம்பரம் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலா் அபிஷேகம் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டு, பொதுப் பணித் துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.
தகவலறிந்த முதலியாா்பேட்டை போலீஸாா் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.