புதுவையில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 52 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுவை மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை 4,236 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், புதுச்சேரிக்கு உள்பட்ட 20 பேருக்கும், காரைக்காலைச் சோ்ந்த 6 பேருக்கும், ஏனாமில் இருவருக்கும், மாஹேவில் 24 பேருக்கும் என 52 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,769-ஆக உயா்ந்தது.
மருத்துவமனைகளில் 228 போ் சிகிச்சை பெறும் நிலையில், 311 போ் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனா்.
இதுவரை 35,621 போ் வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சிகிச்சை பலனின்றி 609 போ் உயிரிழந்துள்ளனா்.