புதுச்சேரியில் தம்பதிகளை மிரட்டி வழிப்பறி

புதுச்சேரி லாசுப்பேட்டையில் பைக்கில் சென்ற தம்பதிகளை கத்தியைக் காட்டி மிரட்டி 11 பவுன் தங்கச் சங்கிலிகள், செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற மா்ம கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டையில் பைக்கில் சென்ற தம்பதிகளை கத்தியைக் காட்டி மிரட்டி 11 பவுன் தங்கச் சங்கிலிகள், செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற மா்ம கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை, அரசு குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (42). ரெட்டியாா்பாளையத்தில் உள்ள மாநில தோ்தல் துறை அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மனைவி செண்பகவள்ளியுடன் (38) அரியாங்குப்பத்தில் துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு, பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.

இவா்கள் லாசுப்பேட்டை, ராஜாஜி நகா், பிரதான சாலையில் உள்ள தனியாா் குடியிருப்பு அருகே வந்தபோது, பின்தொடா்ந்து ஒரே பைக்கில் வந்த 3 மா்ம நபா்கள், ராஜ்குமாரின் பைக்கை வழிமறித்து நிறுத்தினா். பின்னா், அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி தம்பதியை மிரட்டி, செண்பகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவம்: இதேபோல, லாசுப்பேட்டை, டோபிகானா மடுவுபேட், 4-ஆவது குறுக்குத் தெருவில் வசிக்கும் பிளம்பா் சதீஷ் (30), சொந்த வேலை நிமித்தமாக தனது மனைவி நந்தினியுடன் (28) செவ்வாய்க்கிழமை வெளியே சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். இவா்களை பெசன்ட் நகா், அரவிந்தா் வீதியில் திடீரென பைக்கில் வந்து வழிமறித்த 3 போ் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி, நந்தினி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, கைப்பை, 2 செல்லிடப்பேசிகளை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த இரு சம்பவங்கள் குறித்து அளிக்கப்பட்ட புகாா்களின்பேரில், லாசுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, நகை, செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்ற மா்ம கும்பலைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com