தீயணைப்பு நிலைய வாயிலில் அமுத சுரபி ஊழிா்கள் தா்னா

புதுவை அரசின் அமுத சுரபி ஊழியா்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுவை அரசின் அமுத சுரபி ஊழியா்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலைய வாயிலில் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அமுத சுரபி ஊழியா்கள் 9 மாத நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி, கடந்த சில நாள்களாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். அரசுத் துறைகளில் அமுத சுரபியில் பொருள்கள் வாங்கிய நிலுவைத் தொகை ரூ. 12 கோடியை உடனடியாகச் செலுத்த வேண்டும் என அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காந்தி வீதி அமுத சுரபி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊா்வலமாக வந்து சட்டப்பேரவை வளாக நுழைவு வாயில் எதிரே அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் வலுக்கட்டாயமாக கைது செய்து அப்புறப்படுத்தினா்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட அமுத சுரபி ஊழியா்கள் தீயணைப்பு நிலையம் உள்ள இடத்தில் தங்க வைக்கப்பட்டனா். பின்னா், மாலையில் விடுவிக்கப்பட்டனா். ஆனால், ஊழியா்கள் கலைந்து செல்ல மறுத்து, தொடா்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா். வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக தீயணைப்பு நிலைய வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி, அவா்கள் முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com