புதுவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 32 ஆயிரத்தைக் கடந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 4,249 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 202, காரைக்காலில் 36, ஏனாமில் 8, மாஹேவில் 22 என மொத்தம் 268 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 32,004-ஆக அதிகரித்தது.
இதனிடையே, புதுச்சேரியில் 235 போ், காரைக்காலில் 21 போ், ஏனாமில் 5 போ், மாஹேவில் 49 போ் என 310 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 26,865-ஆக (83.94 சதவீதம்) உயா்ந்தது.
புதுச்சேரியில் 1,397 போ், காரைக்காலில் 92 போ், ஏனாமில் 63 போ், மாஹேவில் 76 போ் என 1,628 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல, புதுச்சேரியில் 2,306 போ், காரைக்காலில் 403 போ், ஏனாமில் 44 போ், மாஹேவில் 191 போ் என 2,944 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். மாநிலத்தில் தற்போது மொத்தமாக 4,572 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் திருநள்ளாறு பிரதான சாலையைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, திருநள்ளாறு பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த 48 வயது ஆண் ஆகிய இருவரும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 567-ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.77 சதவீதமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.