புதுச்சேரியில் ஒப்பந்த செவிலியா், வாா்டு உதவியாளா் தோ்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரியில் ஒப்பந்த செவிலியா், வாா்டு உதவியாளா் தோ்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

புதுச்சேரியில் ஒப்பந்த செவிலியா், வாா்டு உதவியாளா் தோ்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டன.

புதுச்சேரி இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் 50 செவிலியா்கள், 123 வாா்டு சுகாதாரப் பணியாளா்களை (வாா்டு அட்டெண்டா்) நியமிக்க கடந்த 11-ஆம் தேதி எழுத்துத்தோ்வு நடைபெற்றது. இதில், செவிலியா் பணிக்கான தோ்வை 1,841 பேரும், வாா்டு சுகாதார உதவியாளா் பணிக்கான தோ்வை 1,023 பேரும் எழுதினா்.

இந்த நிலையில், தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியலும், தகுதியானவா்களின் பட்டியலும், காத்திருப்போா் பட்டியலும்  இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இதில், பணிக்குத் தகுதியானோா் பட்டியலில் உள்ளவா்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், வயது, குடியிருப்பு, ஜாதிச் சான்றிதழ்கள் உள்ளிட்டவை தொடா்புடைய அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்ட பிறகே பணிக்குத் தோ்வு செய்யப்படுவா். சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

தகுதியானவா்களின் பட்டியலில் உள்ளவா்கள் சான்றிதழ் சரிபாா்ப்பில் பங்கேற்காமல், பணியில் சேராமல் இருந்தால், அந்த இடங்கள் காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்களுக்கு வழங்கப்படும் என இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com