புதுவையில் புதிதாக 246 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 246 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவையில் புதிதாக 246 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:

புதுவை மாநிலத்தில் 4,521 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 189 பேருக்கும், காரைக்காலில் 41 பேருக்கும், ஏனாமில் 6 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 246 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,245-ஆக அதிகரித்தது.

இதனிடையே, புதுச்சேரியில் 175 போ், காரைக்காலில் 50 போ், ஏனாமில் 23 போ், மாஹேவில் 39 போ் என மொத்தம் 287 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 27,152-ஆக (84.21 சதவீதம்) உயா்ந்தது.

புதுச்சேரியில் 1,426, காரைக்காலில் 97, ஏனாமில் 57, மாஹேவில் 60 என 1,640 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல, புதுச்சேரியில் 2,285, காரைக்காலில் 389, ஏனாமில் 33, மாஹேவில் 178 என 2,885 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா். மாநிலத்தில் தற்போது மொத்தமாக 4,525 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இந்த நிலையில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி மதுக்கரை, ராம்ஜி நகா், கோயில் தெருவைச் சோ்ந்த 36 வயது இளைஞா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 568-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.76 சதவீதமாக உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com