மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில், புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் புதுவை மாநில இளைஞரணித் தலைவா் அருள் ஒலி தலைமை வகித்தாா். கட்சியின் மாநிலத் தலைவா் ஸ்ரீதா், தலைமை நிலையச் செயலா் கண்ணன், கொள்கைப் பரப்புச் செயலா் திருப்பூா் சுடலை உள்ளிட்ட பலா் மண்வெட்டியுடன் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை, பெரு நிறுவனங்களுக்கு ஆதரவானவை. இதனால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். எனவே, புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினா்.