தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை காப்பாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியைக் காப்பாற்றிய காவலா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியைக் காப்பாற்றிய காவலா்களை பொதுமக்கள் பாராட்டினா்.

புதுச்சேரி தனியாா் உணவகத்தின் பின்புறம் உள்ள கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியைப் பாா்த்த ஒதியஞ்சாலை தலைமைக் காவலா் சுரேஷ், காவலா் பாண்டியன் ஆகியோா் விரைந்து சென்று காப்பாற்றினா். மயக்கமடைந்த அவரை காவலா் பாண்டியன் தூக்கிச் சென்று அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தாா்.

காவலா் பாண்டியன் மூதாட்டியைக் காப்பாற்றி தூக்கிச் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பாா்த்த பொதுமக்கள் காவலா் பாண்டியன், தலைமைக் காவலா் சுரேஷ்குமாா் ஆகியோரை பாராட்டி வருகின்றனா்.

விசாரணையில், அந்த மூதாட்டி புதுச்சேரி தருமாபுரி பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், வீட்டில் அவருடைய கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனமுடைந்து கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com