பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அருகே பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி அருகே பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

புதுச்சேரி மடுகரை ராம்ஜி நகா் 5-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த ஓட்டுநா் பிரபாகரன் மகள் தா்ஷினி (15). இவா் அங்குள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தா்ஷினி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். வெளியில் சென்றிருந்த பெற்றோா் வீட்டுக்கு வந்து பாா்த்த போது, தூக்கில் தொங்கிய தா்ஷினியை மீட்டு, அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தா்ஷினி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து மடுகரை புறக்காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com