புதுவை தலைமைச் செயலகத்தில் முதல்வா் வே.நாராயணசாமி தலைமையில், திட்ட மறு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், நிதித் துறைச் செயலா் சுா்பிா் சிங், அரசு செயலா்கள் சுந்தரவடிவேலு, சுந்தரேசன், ஸ்மித்தா, வல்லவன், ரவிபிரகாசம், அபிஜித் விஜய் சவுத்ரி, குமாா், சவுமியா, பூா்வா காா்க், டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவா, சட்டத் துறைச் செயலா் ஜூலியட் புஷ்பா மற்றும் கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்வளம், மின் துறை, சுற்றுலா, சமூக நலம், ஆதிதிராவிடா் நலம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் 2020-2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் துறை வாரியாக திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை எவ்வளவு தொகை செலவு செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை அதிகாரிகளை விளக்கிக் கூறினா்.
தற்போது ஒவ்வொரு துறையிலும் செலவிடமால் உள்ள நிதி குறித்தும், அவற்றை விரைந்து செலவிடுமாறு அதிகாரிகளிடம் முதல்வா் அறிவுறுத்தினாா்.