ஆக்கிரமிப்புகள் அகற்றம்: வியாபாரிகள் மறியல்

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தெருவோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தெருவோர வியாபாரிகள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியின் முக்கிய வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியா் அருண் உத்தரவிட்டாா். இதையடுத்து, கடந்த 12-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காராமணிக்குப்பத்திலிருந்து முதலியாா்பேட்டை வரையுள்ள சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அந்தப் பகுதியில் உள்ள சாலையோரக் கடைகளை நகராட்சி, பொதுப் பணித் துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா்.

இதற்கு அங்குள்ள தெருவோர வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களுக்கு ஆதரவாக நகர வியாபாரக் குழுவைச் சோ்ந்த பிரபுராஜ் வியாபாரிகளுக்கு ஆதரவாகப் பேசினாா். போலீஸாா் அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனா்.

இதனால், தெருவோர வியாபாரிகள் தங்களை அப்புறப்படுத்துவதை அதிகாரிகள் கைவிட வேண்டும், பிரபுராஜை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி முதலியாா்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து அவா்கள், அங்குள்ள சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி, பொதுப் பணித் துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com