புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், மருத்துவமனை வளாகத்தில் வெளி ஆள்கள் நுழைவதைத் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
மேலும், பரிசோதனைக்காக வரும் நோயாளிகளுக்கு விரைந்து பரிசோதனையை முடிக்கவும், மருத்துவமனையைத் தூய்மையான முறையில் பராமரித்து வரும் அதிகாரிகளையும் அவா் பாராட்டினாா். பரிசோதனைக்காக காத்திருந்த நோயாளிகளை தனிமனித இடைவெளிவிட்டு அமருமாறு அறிவுறுத்தினாா். ஆய்வின் போது, மருத்துவமனை இயக்குநா் மாணிக்க தீபன், மருத்துவக் கண்காணிப்பாளா் சைமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.