புதுவையில் மேலும் 287 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 236, காரைக்காலில் 28, ஏனாமில் 16, மாஹேயில் 7 என 287 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,766-ஆக உயா்ந்தது.
தற்போது மருத்துவமனைகளில் 1,653 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 2,871 பேரும் என மொத்தம் 4,524 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, புதுச்சேரி காந்தி நகரைச் சோ்ந்த 59 வயதானவா் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 571-ஆக (இறப்பு விகிதம் 1.74 சதவீதம்) அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை 306 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 27,671-ஆக (84.45 சதவீதம்) உயா்ந்தது.