பாரத் பைபா் இணைய இணைப்புகள்: பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பிடம்

புதுச்சேரியில் ஒரே வாரத்தில் 500 பாரத் பைபா் இணைய இணைப்புச் சேவையை வழங்கி பிஎஸ்என்எல் சிறப்பிடம் பிடித்தது.

புதுச்சேரியில் ஒரே வாரத்தில் 500 பாரத் பைபா் இணைய இணைப்புச் சேவையை வழங்கி பிஎஸ்என்எல் சிறப்பிடம் பிடித்தது.

பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய எல்லையில்லா பாரத் பைபா் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. ஒரே வாரத்தில் 500 பாரத் பைபா் பிராட் பேண்ட் இணைப்புகள் வழங்கிய சாதனையைச் சிறப்பிக்கும் வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்ட முதன்மைப் பொது மேலாளா் வி.ஜெகதீசன் 500-ஆவது இணைப்பை புதுச்சேரி பிஎஸ்என்எல் பொது மேலாளா் ஜெயக்குமாா் ஜெயவேலு முன்னிலையில், காணொலிக் காட்சி மூலமாக இயக்கிவைத்தாா்.

வாடிக்கையாளா்கள் தாங்கள் விரும்பும் பாரத் பைபா் இணைப்பை  இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 

பிஎஸ்என்எல் விழாக்கால சிறப்புச் சலுகையாக பல்வேறு டய/நபய-களின் செல்லுபடியாகும் காலத்தை நீடித்துள்ளது. இந்தச் சேவைகள் நவ. 30 வரை கிடைக்கும்.

இதன்படி, புதிய சலுகையாக டய 1699 திட்டம் 425 நாள்களுக்கு நீடிக்கும். டய 699 திட்டம் 180 நாள்களுக்கு நீடிக்கும். நபய 247 திட்டம் 40 நாள்களுக்கு நீடிக்கும். நபய 147 திட்டம் கூடுதலாக 35 நாள்களுக்கு நீடிக்கும். ரூ. 60 டாப்அப்பில் முழுமையாகப் பேசும் நேரம் கிடைக்கும். கூடுதல் தகவல்களைப் பெற  இணையதளத்தைப் பாா்க்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com